ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்

ஆதிசேஷன் பெருமாளுக்கு குடைபிடிக்கும் திவ்ய தேசம்

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில், நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இது ஒரு அரிதான காட்சியாகும். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர்கள், கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு, சூரியக்கதிரில் பெருமாள் தகதகவென ஒளி வீசுவார். இந்த காட்சி சூரியனே பெருமாளை தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. .

Read More
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு இணையான தலம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் 24 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் ரோமரி முனிவரால், மலர்கள் மூலம் கண்டறியப்பட்ட நவகைலாயத் தலங்களில் இது ஆறாவது தலமாகும்.

நவதிருப்பதிகளில் சூரியன் வணங்கும் வைகுண்டநாதர் திருக்கோவிலும் இவ்வூரில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றும், நவகைலாயத்தில் ஒன்றும் ஒரேயிடத்தில் அமைந்த திருத்தலம் இதுவாகும்.

ஐந்து வயது வரை வாய்பேசாது ஊமையாயிருந்து பின்னர்,திருச்செந்தூர் முருகன் அருள் பெற்று பாடும் அருள் பெற்ற ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிறந்த ஊர் இதுவாகும். இவர் பூலோக வைகுண்டமாகவும், பூலோக கைலாயமாகவும் இவ்வூர் திகழ்ந்ததாகத் தமது கைலைக்கலம்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோவில் சனி பகவானுக்கு உரிய பரிகார தலமாகும். இக்கோவிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சனி தசையால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை.

இக்கோயிலை வழிபடுவது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. சனிப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.

நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இக்கோவிலில் உள்ள அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சிற்பங்களும், நாயக்கர் கால மற்றும் பாண்டிய கால கட்டிடக்கலைத் திறனுக்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. யாளியின் வால்கள், சுருண்டிருக்கும் நிலையில் வடிவமைத்திருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.

அது போல இளம் மங்கைகளின் எழில் தோற்றமும், அவர்கள் ஆடை அணிகலன்களின் நுணுக்கமான வேலைப்பாடும் காண்பவர்களின் கண்களை கவரும் விதத்தில் உள்ளன.

Read More
வைகுண்டநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வைகுண்டநாதர் கோவில்

வைகுண்டநாதர் கோவில்

ஆதிசேஷன் பெருமாளுக்கு குடைபிடிக்கும் திவ்ய தேசம்

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில், நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இது ஒரு அரிதான காட்சியாகும். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர்கள், கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு, சூரியக்கதிரில் பெருமாள் தகதகவென ஒளி வீசுவார். இந்த காட்சி சூரியனே பெருமாளை தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. .

Read More
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்

யாளி வாயில் அனுமன்

108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.

Read More