ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு இணையான தலம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் 24 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய தலங்களில் ஆறாவது தலமான இக்கோவில் சனி பகவானுக்கு உரிய பரிகார தலமாகும்.

இக்கோவிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சனி தசையால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோவில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு ஈடானதாக சொல்கிறார்கள். சனிப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.

Read More
வைகுண்டநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வைகுண்டநாதர் கோவில்

வைகுண்டநாதர் கோவில்

ஆதிசேஷன் பெருமாளுக்கு குடைபிடிக்கும் திவ்ய தேசம்

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில், நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இது ஒரு அரிதான காட்சியாகும். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர்கள், கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு, சூரியக்கதிரில் பெருமாள் தகதகவென ஒளி வீசுவார். இந்த காட்சி சூரியனே பெருமாளை தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. .

Read More
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்

யாளி வாயில் அனுமன்

108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.

Read More