மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

சனகாதி முனிவர்களுடனும், சப்த ரிஷிகளுடனும் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது.

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, மற்ற தலங்களை விட மிகவும் விசேஷமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், ரிஷிகளும் இருக்கின்றனர். மேலும் நந்தியும் இந்த பீடத்தில் இடம் பெற்றிருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை மற்ற தலங்களில் நாம் காண்பது அபூர்வம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

ஆஞ்சநேயர் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய தலம் (24.04.2025)

வாழ்வில் மங்களம் அருளும் மங்கள ஆஞ்சநேயர்

https://www.alayathuligal.com/blog/mananthakudi24042025

தகவல், படங்கள் உதவி : திரு. சோமசுந்தரம் குருக்கள், ஆலய அர்ச்சகர்

 
Previous
Previous

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில்

Next
Next

பொன்னேரி திருஆயர்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவில்