இலங்குடி பெரிய ஆண்டவர் கோவில்
ரத்தம் போன்ற சிவப்பு நிற திரவத்தை தன் வாயில் இருந்து சுரந்து கொண்டிருக்கும் அதிசய நந்தி
மழையின் அளவை விவசாயிகளுக்கு சுட்டிக் காட்டும் நந்தி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது இலங்குடி என்ற கிராமம். கிராமத்தின் எல்லையில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் பெரிய ஆண்டவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
இக்கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது. இந்த நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது.
தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தபடியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுகொள்கின்றனர். சிலர் இதை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த திரவத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தே படியே தான் இருந்தது. இக்கோவிலில் எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
மழையின் அளவை விவசாயிகளுக்கு சுட்டிக் காட்டும் நந்தி
நந்தி வாயில் இருந்து வழியும் சிவப்பு நிற திரவத்தின் அளவு, அந்த வருடத்தின் மழை அளவை குறிப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த நந்தி சிலையின் வாயில் திரவம் அதிகமாக சுரந்தால், அந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.
இக்கோவிலுக்கு மிக அருகில் உள்ள முக்கிய தலங்களின் விவரங்கள் (newly added)
(ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) to be removed
(to be added) பட்டமங்கலம் குரு பகவான் கோவில் (அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் உடனுறை தட்சிணாமூர்த்தி கோவில்) : குரு ஸ்தலமான இத்தலம் இலங்குடிக்கு அருகிலுள்ளது.
பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்: இலங்குடி பகுதியில் இருந்து எளிதாகச் செல்லக்கூடிய, மிகப்பழமையான குடைவரைக் கோவில்.
வைரவன்பட்டி வயிரவர் கோவில்: பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ளது.
குன்றக்குடி முருகன் கோவில்: குன்றக்குடி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் ஆலயம்.
ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது இலங்குடி.