முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்

தென்காசியிலிருந்து சுமார் 11 கி.மீ, தூரத்திலுள்ள ஆய்க்குடி கிராமத்திலுள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக ஒரு முகத்துடனும்,நான்கு கரங்தளுடனும் தாமரைப் பூவின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.இதில் அரச மரம் சூரியனுக்கும்,வேம்பு அம்பிகைக்கும்,கறிவேப்பிலை சிவனுக்கும், மாதுளை விநாயகருக்கும்,மாவிலங்கு விஷ்ணுவுக்கும் உரியதாகும்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

செல்வ விநாயகர் கோயில்

ஓங்கார வடிவில் விநாயகர்

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோவில் . இங்கு பதினோரு சுயம்பு பிள்ளையார்கள், ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள். பதினாறு செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் தேவையான பதினோரு செல்வங்களை இந்த விநாயகர்கள் அள்ளித் தருகிறார்கள்

Read More
vinayakar, விநாயகர் Alaya Thuligal vinayakar, விநாயகர் Alaya Thuligal

ஹேரம்ப விநாயகர் கோயில்

ஹேரம்ப விநாயகர்

திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.

Read More
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் தனிச்சிறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது.காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சன்னதியாக கருதப்படுகிறது.

Read More