உலகளந்த பெருமாள் கோயில்
பெருமாள் சங்கு சக்கரத்தை வி்த்தியாசமாக ஏந்தியிருக்கும் தலம்
எல்லா வைணவத் தலங்களிலும் பெருமாள் சக்கரத்தை வலது கையிலும் சங்கை இடது கையிலும் ஏந்தியிருப்பார்.ஆனால் 108 திவ்ய தேசங்களளில் ஒன்றான திருக்கோவிலூரில்,திரிவிக்கிரமன் என்ற பெயரோடு, காலை உயர்த்தி உலகளந்த கோலத்தில் காட்சித் தரும் பெருமாள், வித்தியாசமாக சக்கரத்தை தனது இடது கையிலும் சங்கை வலது கையிலும் தரித்திருக்கிறார்.
ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்
பெருமாள் பாதணிகள்
ஸ்ரீவில்லிப்புக்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள திருவண்ணாமலை என்னும் ஊரில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.இவர் ஆண்டாளை திருமணம் செய்வதற்காக திருப்பதியிலிருந்து வந்து இங்கு எழுந்தருளியிருக்கிறார்.இவர் திருப்பதி பெருமாள் போலவே தோற்றமளிக்கிறார்.
இப்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மிகப் பெரிய தோல் பாதணிகள் செய்து வந்து கோவில் பிரகாரத்தில் வைக்கிறார்கள்.சில நாட்களில் இப்பாதணிகள் பயன்படுத்தப்பட்டதைப் போல தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.பெருமாளே இப்பாதணிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.அதனால் இவற்றைத் தங்கள் தலையிலும் உடம்பிலும் ஒற்றிக் கொள்கிறார்கள்.
அனந்தபத்மநாபன் கோவில்
திருவனந்தபுரம் அனுமன் வெண்ணெய் காப்பு
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் ஆலயத்தில் மூலவர் எதிரில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இவருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் உருகுவதுமில்லை.வெய்யில் காலங்தளில் கெட்டுப் போவதுமில்லை.
ரங்கநாதர் கோவில்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்
வைணவர்களுக்கு கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் , ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில்,ஸ்ரீரங்கம் முதன்மைத் தலமாகப் போற்றப்படுகின்றது.பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திவ்ய தேசம் என்ற தனிச் சிறப்பைக் கொண்டது ஸ்ரீரங்கம்.