திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்

கருடன் தன் இரு கைகளிலும் ஆமை, யானை ஆகியவற்றை பிடித்துக் கொண்டிருக்கும் அபூர்வ சிற்பம்

திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் பல அற்புதமான, நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது.

இக்கோவிலில் கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம், கருடன் ஆமை, யானை ஆகியவற்றை தன் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கருடனின் இடது கையில் ஆமையும் அதன் அருகில் ஆலமரம் ஒரு கிளை முறிந்த நிலையில் இருப்பதும், முறிந்த கிளையில் ஆல இலையின் வடிவம் தத்ரூபமாக கனி மற்றும் மொட்டுக்களோடு வடித்திருப்பதும், தலைகீழாகத் தவம் புரியும் வால்கில்ய (மிகச் சிறிய உருவம் உடையவர்கள்) முனிவர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் கருடன் பறப்பது போன்ற அமைப்பும், கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும், அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் இந்த அற்புதமானதும், அரியதுமான சிற்பத்தின் சிறப்புகள் ஆகும்.

இந்த சிற்பத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சியானது, மகாபாரதத்தின் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் உட்பிரிவான ஆஸ்தீக பர்வத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

Read More
திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்

நவநாரி குஞ்சரம் - மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு

யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள்

திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சிறிய சிற்பங்கள் முதல் பெரிய ஆளுயர சிற்பங்கள் வரை மிக அற்புதமாகவும், நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்தக் கோவில் சிற்பத் தொகுப்பில், ஒரு அடி உயரமுள்ள ஒரு சிறிய சிற்பம் தான் நவநாரி குஞ்சரம்.

நவம் என்றால் ஒன்பது. நாரி என்றால் பெண். குஞ்சரம் என்றால் யானை. சிற்பக் கலையின் ஒரு வகையாக, யானை வடிவத்தில் தெரியும் இந்த சிற்பமானது, ஒன்பது பெண்களின் உருவத்தை தன்னுள் கொண்டுள்ளது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது நமக்கு யானையின் உருவம் மட்டும் தான் தெரியும். ஆனால் அதன் அருகில் சென்று பார்க்கும் போது ஒன்பது பெண்கள் தங்கள் உடலையும், அங்கங்களையும் பல்வேறு கோணங்களில் வளைத்து, யானையின் உருவத்திற்குள் அடக்கி இருப்பது நமக்கு தெரிய வரும். மேலும் அந்த ஒன்பது பெண்களின் முகங்களில், நவரசங்களான அன்பு, சிரிப்பு, கருணை, வீரம், பயம், வெறுப்பு, ஆச்சரியம், கோபம், அமைதி என்னும் குணங்களை பிரதிபலிக்கும்படி செதுக்கி உள்ளது நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

இதேபோல், பறவைகளைக் கொண்டு அமைந்த யானை உருவ சிற்பமும் இக்கோவிலில் அமைந்துள்ளது.

இந்த நவநாரி குஞ்சரம் சிற்பம் திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் இருக்கின்றது.

பஞ்ச நாரி துரகம் - குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள்

பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும். நாரி என்றால் பெண். துரகம் என்றால் குதிரை. ஐந்து பெண்களின் உருவத்தை ஒரு குதிரையின் உடலமைப்பில் அடக்கி இருப்பதுதான் பஞ்ச நாரி துரகம்.

சிற்பியின் கற்பனைத் திறனும், மிக நுணுக்கமான வேலைப்பாடும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பெற்றிருந்த கலை திறமையை நமக்கு இந்த கோவில் சிற்பங்கள் உணர்த்துகின்றன. கலையுணர்வு மிளிரும் இத்தகைய படைப்புகளைக் நாம் காணும் பொழுது நம்மை பெருமிதம் அடையச் செய்யும்.

Read More